August 20, 2012

இணைவோம் வா இனியவளே






இனிமை இருந்த போதுதான்
இதழ்கள் சிரித்தன _ எந்தன்
இதயம் அழுதபோதுதானே
தனிமை உணர்ந்தன

மேகம் கொஞ்சும் மலையின்
மீது வேலி என்ன தேவை _ உன்
மேனி கொஞ்சும் உடைகளாக
மாற வரங்கள் தேவை

வானம் பொழியும் மழையானாலும்
உன் தோளில் சிதறனம் _ அந்த
வறண்ட நிலத்தின் மன்னனாலும்
உன் காலில் படரணம்

நெருப்பிலாமல் இரும்பில் கூட
உருவமில்லையே _ உந்தன்
நினைவில்லாத எந்தன் பருவம்
இனிமை இல்லையே

நீ தொட்ட இடமெல்லாம்
இன்று கூட சிலிர்கிறது
நீர் பட்ட பாறை போல
இதயம் கூட வழுக்கிறது

ஒளியின்றி நிழற்கூட
இல்லேயே நிலவே _ உந்தன்
உறவின்றி உயிர்கூட
வேண்டாம் மலரே


பனி கொஞ்சும் மலர் இதழிலில்
இடமுள்ளது _ உந்தன் மடி
சாய்ந்த பின் மலர் கூட
சுடுகின்றது

கடமைக்கு கல்யாணம்
செய்யாதே _ உன்
உடமைக்கு உயிர்
உண்டு மறக்காதே

பெற்றோரின் நெஞ்சத்தை
உருமாற்றுவோம் _ நாம்
பேணிவந்த காதலை
உரமாக்குவோம்

உற்றோரும் ஊர் கூட
கைகோறுவோம் _ நாம்
கண்ட அன்பினை
மெய்கூறுவோம்

வானவில்லே போனால்
கூட மீண்டும் கிட்டும் _ நம்
வாழ்கையில் வரும் வாய்ப்புகள்
ஒருமுறை மட்டும்



Photo courtesy : Mr Martin Don

No comments:

Post a Comment