August 20, 2012

கண் தானம்






உயிரற்ற சரீரம்
சடலமாகும்
உணர்வற்ற உள்ளம்
சிதலமாகும்
வறியோருக்கு கைகொடுங்கள்
மனிதம்மாகும்
எரியும் முன் கண்கொடுங்கள்
புனிதம்மாகும்

கருவிலே வந்ததை
பொதுவிலே கொடுப்போம்
இருளிலே இருப்பவனை
இறந்தும் நாம் காப்போம்

மண் தின்னும் உடலுக்கு
கண் எதற்க்கு _ நீங்கள்
கண் கொடுத்தால் _ சொர்கம்தான்
பின் எதற்க்கு ?


தகனத்திற்கு முன்
தானம் செயுங்கள்
கடவுளை காணாத  கண்கள்
உங்களை கடவுளாய் ஆக்கும்


http://www.facebook.com/Anuvakal

No comments:

Post a Comment