September 10, 2012

உரிமை




நரிகள் கூட்டதிலே நலிந்த
முயல் என்ன செய்யும் ?
நாயிகளின் ஆட்சியில் நியாயம்
கேட்டால் என்ன கிடைக்கும் ?

பிணம் திண்ணும் கழுகுக்கு
மானின் வலி தெரியுமா ?
பணம் திண்ணும் உங்களுக்கு
மானிட வலி புரியுமா ?

பாவிகளின் அடியாட்கள் காக்கி
உடையில் இருக்கும்
பாவப்பட்டவன் நீதி கேட்டால்
சட்டத்தை வைத்து அடக்கும்

மானம் அற்றவர் திருந்தமாட்டான்
தெரிந்து கொண்டோம் _ இந்த
ஈன நாட்டில் பிறந்தது பாவம்
புரிந்து கொண்டோம் ..

_ வை . நடராஜன்

No comments:

Post a Comment