July 30, 2012

கல்வி வியாபாரம் ! பாவம் பிள்ளைகள்




பள்ளி குழந்தைகள் பாடம் 
படிக்குது _ வாங்கும்
மதிப்பெண்ணே  வாழ்க்கை ஆனது
கல்வி தொழில்சாலை காசில்
மெதக்குது _ கண்டுக்காம அரசு
கண்ணை மூடுது

புள்ளைங்க

பெத்தவங்க பெருமைக்கு
பாவம் படிக்குது
பள்ளி வியாபாரத்துல
விளம்பரம் ஆனது
சொல்லி கொள்ள இன்னும் 
என்ன இருக்குது _ இந்த
கல்வி முறை வாழ்வை
கெடுக்குது

இந்த சமுதாயம்
இன்னும்  கொடுமைங்க
அரசாங்க வேலைக்கு  
ஈயாக மெய்குது _ ஆனா 
அரசாங்க பள்ளியை
நோயாக பாக்குது

மாலை விளையாட்டு
மலை ஏறி போயாச்சி
மாமா பாட்டி சொந்தங்கள்
புகை படத்தில் புதைந்தாச்சி

கல்யாண பத்திரிகையில
கல்வி தகுதி போட _
கை சூப்பும் காலத்திலே 
கழுதையா மாறியாச்சி

என்ன நடக்குது
ஒன்னும் புரியல
என்ன புடிச்சதோ
அதை படிக்கலை

காதல் இசை ஆட்டம்
ஒன்னும் கிடைக்கல
கணக்கு பாடம் மட்டும்
வாழ்க்கை என்றல்லை

ஓடும் குதிரையாய்
வாழ்க்கை ஓடுது
மேல உக்காந்து
பள்ளி விரட்டுது

பசங்க ஓடி
முன்னாடி வந்துட்ட
பாராட்டு எல்லாமே
பள்ளிக்கு போகுது
முன்னாடி வந்தவன்
மூஞ்சை காட்டி
அடுத்த வருஷத்துக்கு
ஆளை தேடுது

மத்தவன் முன்னாடி
பெருமை பேசிக்க
பெத்தவன் புத்திக்கு
இன்னும் உறைக்கல

என்ன புடிக்குது
என்னை கேட்கல
என்ன புடிச்சதோ
அதை கொடுக்கலை

ஆட்டு மந்தையிலே
சேத்து விட்டாச்சி
அங்கே படிச்சிதான்
வாழ்க்கை வீணாச்சி 

அரசாங்கம் நேர்மை 
தரிசாக போயாச்சி
வேடிக்கை பார்த்தே 
வேதனை தந்தாச்சி

கல்வியை மொத்தமா
வெளியேதான் வித்தாச்சி
அவன் கிட்ட போனதும்
கோமணம் தான் சொத்தாச்சி 

ஆயிரம் படிச்சாலும்
வாழ்க்கை இனிக்கல 
காசா கொட்டுது
வாழ புடிக்கல 

பள்ளி கூடத்துல
வாழ்கையை படிக்கலை 
பணமா கொட்டுது _ ஆனா
வாழ தெரியல 

6 comments:

  1. அற்புதம்! சித்திக்க வைக்கும் கவிதை..

    ReplyDelete
  2. This Kavithai exposing the current situation of our education system. Everybody should realize, what is happening around ourselves. Giving good education to their child is a primary responsibility to parents. Every parents should realize that whether their child is being get good education which leads to have good life or that education which will be used to earn more money instead of good life. YOUR LIFE, IN YOUR HAND.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி .. மாற்றம் வரும் என நம்புவோம்

      Delete