January 14, 2013

இரண்டே ஆசை






மணக்க தடை இருந்தால்
நினைத்து வாழ்வேன்
நினைக்கவும் தடை விதித்தால்
என்ன செய்வேன் ??

நாகரீகமாக அழ
தெரியவில்லை
நாலு பேரு முன்னாலும் அழ
முடியவில்லை

காதலில் மனம் போகும் வரை
கடவுளை துதித்ததில்லை
கடவுளாய் உன்னை பார்த்தும் - நீ
கடுகளவு கூட எனை மதித்ததில்லை ...

இரண்டே ஆசை ,

ஏமாற்றிய உனை நான்
நிந்திக்க கூடாது - இனி
எக்காலமும் உனை நான்
சந்திக்க கூடாது

- வை .நடராஜன்

2 comments:

  1. #ஏமாற்றிய உனை நான்
    நிந்திக்க கூடாது - இனி
    எக்காலமும் உனை நான்
    சந்திக்க கூடாது#

    கொன்னுட்டீங்க!

    ReplyDelete