January 14, 2013

ஒரே நிலவுதான்




எங்கிருந்து பார்த்தாலும்
ஒரே நிலவுதான்
எந்த பெண்ணை பார்த்தாலும்
உன் ஒரே நினைவுதான்

வார்த்தை உண்மை ஆனது
வாழ்க்கை தூய்மை ஆனது
கல் கூட மென்மையானது - காரணம்
உன் பெண்மையானது ..

ஏகலைவனாய் மாறிவிட்டேன் -
உனை பார்த்து
ஏகப்பட்ட நல்லவை கற்றுக்கொண்டேன் .

அணைத்தும் ஆனாய்
ஆசாணும் ஆனாய்

நாம் ஒன்றாக வாழவில்லை எனினும்
நீ நன்றாக வாழ்தல் வேண்டும் .

- வை .நடராஜன்

2 comments:

  1. நன்று !!

    ஏகலைவனாய் மாறி ஏகப்பட்டதைக் கற்றுக்கொண்டீர் போலும் !! :)

    ReplyDelete
  2. #எங்கிருந்து பார்த்தாலும்
    ஒரே நிலவுதான்
    எந்த பெண்ணை பார்த்தாலும்
    உன் ஒரே நினைவுதான்

    நாம் ஒன்றாக வாழவில்லை எனினும்
    நீ நன்றாக வாழ்தல் வேண்டும்#


    அருமையான வரிகள்!

    ReplyDelete