மருத்துவமனை சென்று பாருங்கள்
பல ஆயிரம் மனிதர்கள் மரணத்தை கண்டு
போரடிக்ககொண்டு இருக்கிறார்கள்
மதுகடையோரம் சென்று பாருங்கள்
பல ஆயிரம் மனிதர்கள் மரணத்தை காண
நீராடிக்கொண்டு இருக்கிறார்கள் ..
உண்டதை எல்லாம் உரமாக்கி
உடல் வளர்க்கும் நம்
வயிறு
கண்டதையெல்லாம் போட்டு வைக்கும்
கழிவு நீர் தொட்டி அல்ல
களியாட்ட மதுவில் இன்று
சுவர்க்கம் தெரியும் _ நாளை
வலியோடு மடியும் போதுதான்
உண்மை புரியும்
http://www.facebook.com/Anuvakal

No comments:
Post a Comment